Wednesday, August 31, 2005

Islam is the peace of Religion

"இஸ்லாம்"

இறைவனால் உலக மக்கள் அனைவருக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமாகும். "இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தவிதமான நிர்பந்தமும் இல்லை என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான். திருக்குர்ஆன் உலகமக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுபதேசமே அன்றி வேறில்லை என்று இறைவன் கூறுகின்றான்."


இன்றைய சூல்நிலையில் உலகலவில் இஸ்லாமிய மார்க்கம் ஒரு தீவிரவாத மார்க்கமென்றும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும் பொய் முழக்கங்கள் எழுப்பப்படுவருகின்றது. அத்தோடு மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் மீது தீவிரவாதிகள் என்ற முத்திரையிடப்படுகின்றது. இத்தகைய பனிகளை இன்றைய மீடியாக்கல் அதிக அளவில் செய்து வருகின்றது.


இத்தகைய பொய்பிரச்சாரங்களை முறியடிப்பதற்காகவும், உலக மக்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி அறிந்து, அதனை ஏற்று, அதனடிப்படையில் தனது வாழ்வின் முறைகளை மாற்றிக்கொண்டு முற்றிலும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய சமுதாயமாக நாம் அனைவரும் மாற வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு சிறிய முயற்சி...!

இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

அல்-ஹஸனாத்